வழக்கமான இட்லி போல் அல்லாமல், இந்த அவல் இட்லி மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இதை ஒரு முறை சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
புழுங்கலரிசி- 1 கப்
உளுந்தம்பருப்பு – அரை கப்
கெட்டி அவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
அப்ப சோடா- ஒரு சிட்டிகை
செய்முறை : அரிசியையும் உளுந்தையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அவலை தனியாக ஊறவையுங்கள். தொடர்ந்து அரிசி, உளுந்து, அவலை சேர்த்து அரைத்தெடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 8 மணி நேரம் புளிக்க வைத்த பின்பு, புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்து கலந்து, இட்லியாக ஊற்றுங்கள். சூப்பர் ருசியாக இருக்கும்