கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படி இந்த சம்மர் ஸ்பெஷலாக அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
அவல் எண்ணெய் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு கடுகு சீரகம் வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை கொத்தமல்லி துருவிய தேங்காய்
செய்முறை
அவலை எடுத்து நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கலந்து விடவும். இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில், ஊறவைத்த அவலை சேர்க்கவும்.
தாளித்த பொருட்கள் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும். கொழுக்கட்டை கலவையை பிடித்த வடிவில் உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். இப்போது தயார் செய்த உருண்டைகளை இட்லி குக்கரில் 10 நிமிடம் வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் அவ்வளவு தான் சுவையான மென்மையான அவல் கொழுக்கட்டை சூடாக பரிமாற தயாராக உள்ளது.