/indian-express-tamil/media/media_files/2025/04/21/fyrtokRnRzGC2CiM9ItB.jpg)
பெண்களுக்கு ஹார்மோனல் சமநிலையின்மை காரணமாக மாதவிடாய் சீராக இல்லை என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இது போன்ற காரணங்களால் பி.சி.ஓ.எஸ் உருவாகிறது. இந்தப் பிரச்சனையை சீரமைக்கும் தன்மை வாழைப்பூவிற்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாழைப்பூவை சாறு எடுத்து குடிக்கலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி அறிவுறுத்துகிறார். இதனை தொடர்ச்சியாக குடிக்கும் போது மாதவிடாய் சீராக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கருமுட்டையின் வளர்ச்சியை இது சீராக்கும்.
இது மட்டுமின்றி செரிமானம் தொடர்பான பிரச்சனைக்கும் வாழைப்பூ மருந்தாக அமையும். அதன்படி, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை சரி செய்வதற்கு தினமும் வாழைப்பூ சாறு குடிக்கலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ மற்றும்
பனங்கற்கண்டு.
செய்முறை:
வாழைப்பூவை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இட்லி பாத்திரத்தில் ஒரு துணி போட்டு, அதன் மேல் நறுக்கிய வாழைப்பூவை வைத்து வேக வைக்க வேண்டும். அதன் பின்னர், இந்த வாழைப்பூவை பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.
இந்த வாழைப்பூ சாறுடன் சுவைக்காக ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாழைப்பூ சாறு தயாராகி விடும். இதனை பெண்கள் தொடர்ச்சியாக குடிக்கும் போது மாதவிடாய் சீராகும்.
நன்றி - Harshu's Kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.