Advertisment

உடல் எடை குறைவது முதல் சர்க்கரை நோய் வரை… இந்த தண்ணீரை: இந்த நேரத்தில் குடியுங்க

பார்லி தண்ணீர் ஒரு நல்ல புத்துணர்வு தரும் பானமாகும். இதில் நார்சத்து, பல்வேறு சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர் ஒரு நல்ல புத்துணர்வு தரும் பானமாகும். இதில்  நார்சத்து, பல்வேறு சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.  நமது ஜீரண மண்டலத்திற்கு இது ஒரு ஊட்டசத்து மருந்துபோல் செயல்படும். மலச்சிக்கலுக்கு இயற்கையான தீர்வு தரும்.

Advertisment

இது வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கும். இதில் இருக்கும் அதிக நார்த்து ஜீரணத்தை ஊக்குவிக்கும். மேலும் குடலுக்கு நல்ல பானமாக இருக்கும். வரட்சியால் ஏற்படும் சிக்கலை குறைக்கிறது.

வெயில்காலத்தில், உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான தண்ணீர் கொடுத்து, உடலின் எலக்ட்ரோலைட் அளவை சீராக்குகிறது.

இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் தடுக்கும். மேலும் சிறுநீரக கல்லுக்கு தீர்வாக இருக்கும். குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் ரத்ததை சுத்திகரிக்கும்.

மேலும் பார்லி தண்ணீர் உடல் எடை குறைக்க உதவுகிறது. கெட்ட கொல்ஸ்ட்ராலை உடல் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதால், உடல் எடை குறையும்.

இதில் இருக்கும் கரையக்கூடிய நார்சத்து, பீட்டா – குளுக்கன், குளுக்கோஸ் மூலக்கூறுடன் சேர்ந்து, சர்க்கரையை உடல் எடுத்துகொள்ளும் வேகத்தை குறைக்கிறது.  இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது.

பார்லி தண்ணீர் எப்படி செய்வது

பாலியை நன்றாக கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள். இத்துடன் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்கவும். க்ரீமாக மற்றும் கட்டியாக வரும்வரை காத்திருக்கவும். இதை வடிகட்டி அத்துடன் எலிமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். குறிப்பாக காலை வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இதுவே சிறந்த நேரம் .

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment