New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/28/gJPTc90ezyjs0jaX23mY.jpg)
கோடை காலத்திற்கு ஏற்றார் போல் பார்லி முருங்கைக் காய் கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதனை நடிகை ஜெயலட்சுமி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்றார் வகையில் நம்முடைய உணவு முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில், இந்த வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
இதற்காக பார்லி முருங்கைக் காய் கஞ்சி எப்படி செய்ய வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். அதன் ரெசிபியை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பொருட்கள்:
பார்லி,
முருங்கைக் காய்,
தண்ணீர்,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள்,
சீரகப் பொடி.
மிளகுத் தூள்,
உப்பு மற்றும்
கொத்தமல்லி இலை.
செய்முறை:
ஒரு சிறிய கிளாஸ் அளவிற்கு பார்லியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த பார்லி சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும். இந்த நேரத்தில் முருங்கைக் காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர், பார்லி மற்றும் முருங்கைக் காய்களை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். இவை நன்றாக வெந்ததும், முருங்கைக் காயில் இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.
இதையடுத்து, வேக வைத்த பார்லி, முருங்கைக் காயின் சதைப் பகுதி, ஒரு கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், சீரகப் பொடி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.
இறுதியாக சிறிதளவு மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்தால் சுவையான பார்லி முருங்கைக் காய் கஞ்சி தயாராகி விடும். உடல் சூடு தணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை குடிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.