New Update
/indian-express-tamil/media/media_files/ooSG7Bcq9WDqevICa7AL.jpg)
குதிரைவாலி அரிசியின் நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
"நம்முடைய ஊர் பகுதிகளில், குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் களையாக வளர்ந்த இந்த செடியாக நீண்ட காலமாக நாம் மறந்து விட்டோம்." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
குதிரைவாலி அரிசியின் நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், குதிரைவாலி அரிசியின் நன்மைகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "யாருக்கும் அறிமுகமே இல்லாத தானியமாக குதிரைவாலி அரிசி இருப்பதை நம்மால் பார்க்க முடியாது. இந்த சிறப்புமிக்க தானியத்தில் ஏராளமான புரத சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இதேபோல், இரும்புசத்து அதிகமாக இருக்கிறது.
குதிரைவாலி அரிசியை நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிச் சென்று தங்களுடைய உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகிறார்கள். நம்முடைய ஊர் பகுதிகளில், குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் களையாக வளர்ந்த இந்த செடியாக நீண்ட காலமாக நாம் மறந்து விட்டோம்.
அதனால், வெள்ளைச் சோறுக்கு பதிலாக குதிரைவாலி அரிசிச் சோறை சாப்பிடலாம். குறிப்பாக மோர்ச் சோறுக்கு இவை அற்புதமாக இருக்கும். நம்முடைய குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தயிர்ச் சோறுக்கு பதில், இனி குதிரைவாலி அரிசிச் சோறு கொடுக்கலாம். இவை அவ்வளவு அற்புதமாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.