/indian-express-tamil/media/media_files/2025/04/30/WNZm0R72bRXJ4acosm98.jpg)
சமீபத்தில், 32 வயதுடைய ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாரடைப்புடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார். அவர் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர், நல்ல உடல் தகுதியுடன் இருந்தார், மேலும் அவருக்கு எந்தவிதமான மருத்துவப் பின்னணியும் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
இருப்பினும் அவர் மயங்கி விழுந்ததையடுத்து அவரது இரத்தப் பரிசோதனை முடிவுகள் மூலம் பல சந்தேகங்கள் மருத்துவர்களுக்கு எழுந்தது. அவரது ஹீமோகுளோபின் அளவு 18 கிராம்/டெசி லிட்டர் ஆக இருந்தது, 17.2 கிராம்/டெசி லிட்டர் மேல் வரம்பு என்று கருதப்படுகிறது. இதன் பொருள் அவர் போதுமான நீர் அருந்தாததால் அவரது இரத்தம் மிகவும் பிசுபிசுப்பாகிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் அந்த பிசுபிசுப்பான இரத்தம் அவரது தமனிகளை அடைத்து, மாரடைப்பை ஏற்படுத்தியதாகவும் இரத்தக் கட்டியை கரைக்க அவர்கள் இரத்தத்தை மெல்லியதாக்கும் மருந்துகளைப் பயன்படுத்தியதாகவும் கூறினர். அவருக்கு ஸ்டென்ட் (தமனிகளை விரிவுபடுத்தும் வலை போன்ற சாதனம்) தேவையில்லை, மேலும் அவருக்கு சிரை வழியாக நீர்ச்சத்து செலுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
இது செரிமான அமைப்பைத் தவிர்த்து, திரவங்களையும் எலக்ட்ரோலைட்டுகளையும் நேரடியாக இரத்த ஓட்டத்தில் செலுத்தும் முறையாகும். பின்னர் அவரது ஹீமோகுளோபின் அளவு இயல்பான 13 கிராம்/டெசி லிட்டர் என்ற அளவுக்கு குறைந்தது என்றனர். அவர் காலை நேரங்களில் உடற்பயிற்சி, ஜாக்கிங் செல்வதும் அப்போது அதிக வியர்வை வெளியேறுகிறது. ஆனால் அதை ஈடுசெய்ய அவர் போதுமான தண்ணீர் குடிக்காததும் தெரியவந்தது. அதற்கு பதிலாக, அவர் காஃபின் கலந்த எனர்ஜி பானங்களையும், சோடாக்களையும் குடித்து இருக்கிறார்.
நீரிழப்பு எவ்வாறு இரத்த உறைவுக்கு வழிவகுக்கிறது நீரிழப்பு உடலில் சுற்றும் இரத்தத்தின் மொத்த அளவைக் குறைக்கிறது. குறைந்த அளவு மற்றும் அதிக சோடியம் உள்ளடக்கம் இருப்பதால், இரத்தம் அடர்த்தியாகிறது மற்றும் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கும்போது அது ரிலாக்ஸாக பாயும்.
இது இரத்தத்தை நகர்த்துவதற்கு இதயத்தை கடினமாக உழைக்க வைக்கிறது. அதனால்தான் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த அடர்த்தியான இரத்தம் வேகமாக உறையும் போக்கு உள்ளது. இந்த கட்டிகள் பின்னர் தமனிகளை அடைத்து, இதயத்திற்கு ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் செல்வதைத் தடுக்கின்றன, இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.
நீரிழப்பு பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை சீர்குலைக்கலாம், அவை இதயத்தின் மின் தூண்டுதல்களுக்கு முக்கியமானவை. எலக்ட்ரோலைட் சமநிலையின்மை இதயத்தின் தாளத்தை கட்டுப்படுத்தும் மின் சமிக்ஞைகளில் குறுக்கிட்டு, அரித்மியா அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
நீரிழப்பு கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடத் தூண்டும், இது மேலும் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தத்தின் அடர்த்தி நுரையீரல் உறைவுகளையும் தூண்டலாம்.
நீரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உங்கள் சிறுநீரின் நிறத்தை சரிபார்ப்பது எளிதான வழி. அடர் நிற சிறுநீர் என்றால் உங்களுக்கு கடுமையான நீரிழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் தலைவலி, மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படலாம்.
உங்கள் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியவுடன் தண்ணீர் குடிக்கத் தொடங்குங்கள், அது வெளிர் வைக்கோல் நிறமாக மாறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் சிறுநீர் கழிவு ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைவிடக் குறைவாக இருந்தால், நீங்கள் அதிக திரவங்களை குடிக்க வேண்டும் என்று அர்த்தம்.
உடற்பயிற்சிக்குப் பிறகு நீரிழப்பை எவ்வாறு தடுப்பது?
உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், உடற்பயிற்சியின் போதும் போதுமான நீரேற்றத்தை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியின் போது நீங்கள் இழக்கும் திரவத்தின் அளவை விட சுமார் 1.5 மடங்கு அதிகமாக திரவங்களை குடிக்கவும்.
ஒரே நேரத்தில் குடிக்க வேண்டாம், திரவ அழுத்தம் சிறுநீரகங்களை அவற்றை உடலில் இருந்து வெளியேற்றத் தூண்டும். நாள் முழுவதும் சிறிய சிப்புகளாக திரவங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தாகம் நீரிழப்பின் தாமதமான அறிகுறியாகும், எனவே அதை உணர காத்திருக்க வேண்டாம். நீங்கள் அதிகமாக வியர்த்தால், நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக குடிக்க வேண்டியிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.