சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அப்படியாக இந்த சம்மருக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மற்றும் இன்ஸ்டன்ட் ஆக செய்யக்கூடிய ஒரு டிபன் ரெசிபி பற்றி குறிஞ்சி டாட் காம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பச்சை பயிறு நிலக்கடலை உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு பச்சரிசி
செய்முறை
ஒரு அளவுக்குப் எடுத்து அரை கப் பச்சை பயிறு. அரைக்கப் வேர்க்கடலை. கால் கப் அரிசி ஆகியவற்றை ஊற வைக்கவும். அரிசியை தனியாக ஊற வைக்க வேண்டும்.
காலை உணவு என்றால் இரவே ஊற வைக்க வேண்டும். இரவு செய்ய வேண்டும் என்றால் மதியம் ஊற வைத்தால் போதும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி அரைத்து அதில் இந்த ஊற வைத்த பருப்பையும் போட்டு சோம்பு, வரமிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இது மாவு மாதிரி கிடைத்துவிடும்.
இதை எப்போதும் போல தோசை மாதிரியும் ஊற்றலாம். இல்லையென்றால் வெங்காயம் சேர்த்து வெங்காய தோசை, துருவி போட்டு கேரட் தோசை போன்றும் செய்து சாப்பிடலாம். சுவையாகவும் ஹெல்தியாகவும் இருக்கும்.