கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. நம் ஊரில் இட்லி பொடி, ஊறுகாய் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கருவேப்பிலை சட்னி போன்றவற்றை கீரையுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.
Advertisment
கீரையை துவையல் செய்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். கீரை மற்றும் இலைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் அனீமியா போன்ற நோய்களில் இருந்து விடுபட உதவும். எனவே இப்படியாக சத்துக்கள் நிறைந்த மூன்று இலைகளை வைத்து கதம்ப சட்னி எப்படி செய்வது என்று வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி வரமிளகாய் - 3-4 இஞ்சி - 1 சிறிய துண்டு பூண்டு - 3-4 பல் தக்காளி சின்ன வெங்காயம் - 5-6 தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி புளி - சிறிய துண்டு எண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
Advertisment
Advertisements
கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை மூன்றையும் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின்பு இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இலைகள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும். புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும். கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும். இந்த செய்முறையைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் எந்த கீரையிலும் சட்னி செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.