New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/20/X1wjFIN66c46iw0inARg.jpg)
கற்பூரவல்லி பயன்கள் - டாக்டர் மைதிலி
நமது உடலில் நுரையீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்போ கட்டாயம் குடிக்க வேண்டிய கசாயம் பற்றி டாக்டர் மைதிலி கூறுகிறார்.
கற்பூரவல்லி பயன்கள் - டாக்டர் மைதிலி
தொடர்ந்து நம் உணவில் ரசம் துவைகள் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வரும் போது உடலில் உள்ள அத்தனை கழிவுகளும் வெளியேறும் நுரையீரல் சுத்தமாகும் என்று மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
கற்பூரவள்ளியில் இரண்டு வேதிப்பொருட்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது. இவை நம் உடலில் அடிக்கடி காய்ச்சல், சளி போன்றவை வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நெஞ்சு சளி உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை வைத்து கசாயம் தயாரிக்கலாம். காலை உணவுக்கு 20 நிமிடம் முன்பாக இதை எடுத்துக் கொண்டாலே போதும் நெஞ்சில் உள்ள அத்தனை சளியும் வெளியேறிவிடும்.
இந்த கற்பூரவள்ளி இலைகளை வைத்து கசாயம் செய்வது எப்படி என்று பார்ப்போம். கற்பூரவள்ளி இலைகளை சுத்தமாக எடுத்து கழுவி உரலில் நசுக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொண்டு அது ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மஞ்சள் தூள், மிளகுத்தூள், சுக்குப்பொடி மூன்றையும் சேர்த்து கொதிக்கவிட்டு முக்கால் டம்ளர் அளவிற்கு கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் காலை உணவு இரவு உணவுக்கு முன்பாக தொடர்ந்து நான்கு நாட்கள் எடுத்து வந்தால் நெஞ்சு சளி சுத்தமாகும்.
வரட்டு இருமல் உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து தேன் சேர்த்து காலை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு தலைவலி, தலைபாரம் அதிகமாக இருக்கும். அவர்கள் இந்த கற்பூரவள்ளி இலை சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் எடுத்து இரண்டையும் கொதிக்க வைத்து தலைக்கு குளிப்பதற்கு முன்பாக தலையில் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிக்கலாம்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு விட கடினமாக இருக்கும். அவர்கள் இந்த கற்பூரவள்ளி இலைகளை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
கற்பூரவள்ளி ரசம் சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் குடல் இயக்கம் ஆகியவற்றை சரியாக்கும். குடல் இயக்கம் சீராகும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். நுரையீரல் புற்றுநோய் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை குறைக்கும்.
புற்றுநோய் செல்களுக்கு எதிராக கற்பூரவல்லி செயல்படுவதால் அனைத்து வகையான புற்றுநோயும் வராமல் தடுக்கும். சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த கற்பூரவள்ளி இலைகள் உதவும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் இதனை ரசம் மாதிரி எடுத்துக் கொண்டால் நுரையீரல் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். பல் வலி, பல் சொத்தை போன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மலேரியா நோய் தொற்று ஏற்படும் பாதிப்பையும் இது குறைக்கும். இந்த கற்பூரவள்ளி இலை சாறு எடுத்து சருமத்தில் தேய்த்தால் கொசு கடிக்காது என்றும் மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.