வெற்றிலை வெறும் சுவை நிறைந்தது மட்டுமல்ல, அதற்கு தனியாக மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இந்நிலையில் அதில் இருக்கும் மருத்துவ, நன்மைகளை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
வெற்றிலை இலைகள், யூரிக் ஆசிட் அளவை கட்டுபடுத்த உதவுகிறது. சிறுநீரக கல் ஏற்படாமல் இருக்கவும். அதை குறைக்கவும் உதவுகிறது. சிறுநீரக கல் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற சில விஷயங்களை நாம் முயற்சி செய்யலாம்.
எப்படி சாப்பிடுவது?
சிறுநீரக கல் உள்ளவர்கள், வெற்றிலைகளை மெதுவாக மென்று சாப்பிடலாம்.
கிருமிகளை அழிக்கும் பண்புகள் உள்ளதால். இந்நிலையில் நமது வாயில் உள்ள கெட்ட பாக்டிரியாதான் வாய் துர்நாற்றம் அடிப்பதற்கும், மஞ்சளாக பற்கள் மாறுவதற்கும், பற்கள் கெட்டுபோவதற்கு காரணமாக இருக்கிறது. நாம் சப்பிட்ட பிறகு, வெற்றிலைகளை மென்று சாப்பிட்டால், குடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை இருப்பதோடு , கெட்ட நாற்றம் மற்றும் கெட்ட சுவாசஸம் இல்லாமல் போகும்.
நமது ஜீரணத்திற்கு உதவுகிறது. உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி, தேவையான சத்துக்களை குடல் எடுத்துல்கொள்ள உதவுகிறது.
இதுபோல சர்க்கரை நோய்க்கும் உதவியாக இருக்கிறது. திடீர் என்று உயரும் ரத்த சர்க்கரை அளவை அப்படி உயராமல் தடுக்கிறது.