கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தினசரி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த காய்கறிகள் அங்கிருந்து சில்லறை வியாபார கடைக்கு விற்பனைக்கு செல்கிறது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் கடையில் 29 கிலோ 500 கிராம் எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் வியப்புடன் பார்த்தனர்.
இதுவரை இவ்வளவு எடை கொண்டுள்ள சேனைக்கிழங்கு வந்ததில்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“