இன்றைய தலைமுறையினர் பலர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை பழக்கமும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், புற்றுநோயை தடுக்கும் பொருள்களை நம் அன்றாட உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்வது என மருத்துவர் சிவராமன் கூறியதையடுத்து வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் ஜூஸ் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
திண்டுக்கல்லில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை, அதன் தனித்துவமான சுவைக்காக மட்டுமின்றி, அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் புகழ்பெற்றது. பொதுவாக மக்கள் கொட்டையில்லாத திராட்சையை விரும்புவதுண்டு. ஆனால், இந்த கருப்பு பன்னீர் திராட்சையில் உள்ள விதைகள் மற்றும் அதன் தோலில் புதைந்துள்ள அரிய சத்துக்கள் குறித்து நாம் அறிந்துகொள்வது அவசியம்.
இந்த திராட்சையின் தோலிலும், விதைகளிலும் ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) மற்றும் ஆந்தோசயனின்ஸ் (Anthocyanins) போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ரெஸ்வெராட்ரோல் என்பது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சேர்மம். இது கூகுளில் தேடினால் அதன் நன்மைகளை விரிவாக அறியலாம்.
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இந்தச் சத்துக்கு உள்ளது. ஆந்தோசயனின்ஸ், திராட்சைக்கு அதன் அடர் கருப்பு நிறத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கும் உதவுகிறது.
Advertisment
Advertisements
நவீன சந்தையில் கொட்டையில்லாத திராட்சைகள் அதிகம் காணப்பட்டாலும், நம் மண்ணில் விளையும், கொட்டையுடன் கூடிய திண்டுக்கல் கருப்பு பன்னீர் திராட்சையின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது. கொட்டையில்லாத திராட்சைகளை உண்பது, அரிய சத்துக்களை இழப்பதற்கு ஒப்பாகும். ஏனெனில், திராட்சையின் விதைகளிலும், தோலிலும் தான் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
எனவே, இனி திராட்சையைத் தேர்ந்தெடுக்கும்போது, திண்டுக்கல் கருப்பு பன்னீர் திராட்சைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது நம் பகுதிக்கு உரிய ஒரு தனித்துவமான உணவுப் பொருள் மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புதையலும் கூட. அதன் விதை மற்றும் தோலில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற சத்துக்களையும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை - 2 கப் தண்ணீர் - 1 கப் சர்க்கரை அல்லது தேன் எலுமிச்சை சாறு
செய்முறை:
திராட்சையை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். திராட்சையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஜூஸை வடிகட்டி, சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலக்கவும். புளிப்பு சுவை வேண்டுமென்றால், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.