/tamil-ie/media/media_files/uploads/2022/07/Bloating.jpg)
சாப்பிட்டால் வயிறு உப்பும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் சில உணவுகளான பீட்சா, பிரியாணி, பாஸ்தா, தந்தூரி கிக்கன் போன்ற விஷயங்களை நாம் சாப்பிடாமல் இருப்பது கடினம். இந்நிலையில் அதிகமாக சாப்பிட்டால், வயிறு உப்புதல் நிகழ்கிறது. வயிறு உப்புதலுக்கு முக்கியமாக காரணமாக அதிகமாக சாப்பிடுவது இருக்கிறது.
நீங்கள் டிவி, செல்போன் ஆகியவற்றை பார்த்துகொண்டே சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியாது. மேலும் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிகமாக சாப்பிடுவீர்கள்.
விரைவாக சாப்பிடுவோர், அதிகமாக உணவுகளை சாப்பிடுவீர்கள். இந்நிலையில் உங்களுக்கு தாகம் எடுக்கும்போதுகூட உங்களுக்கு பசி ஏற்படும். இதனால் உங்களுக்கு பசிப்போது இருந்தால், முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயத்தை சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். சூடான நீரில், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து குடிக்கலாம்.
காலை உணவை சாப்பிடாமல் தவிர்காதீர்கள். இரவில் அதிகமாக சாப்பிட்டால், காலையில் சாப்பிடுவதை நாம் தவிர்ப்போம். ஆனால் நீங்கள் நார்சத்து உள்ள காலை உணவை சாப்பிட வேண்டும்.
15 நிமிடங்களாவது நன்றாக நடக்க வேண்டும்.
பொட்டாசியம் ரிச் உணவுகள்: வாழைப்பழம், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, கீரை, சக்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
தண்ணீர் குடிப்பதால், வயிற்று உப்பாது. நாள் முழுவதும் சிறுகச் சிறுக தண்ணீர் குடியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.