20 நிமிடத்தில் சுவையான பாம்பே சட்னி: தேங்காய் சேர்க்காம இப்படி செய்யுங்க

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு தேங்காய் கூட தேவையில்லை.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு தேங்காய் கூட தேவையில்லை.

author-image
WebDesk
New Update
bombay chutney

தேங்காய் சேர்க்காத, 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பாம்பே சட்னியை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம். இந்தச் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்குச் சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

கடலை மாவு: 1/2 கப் (125 மிலி)
எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு: 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு: 1 டீஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
சீரகம்: 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
இஞ்சி: ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு: 4 பல் (நறுக்கியது)
வெங்காயம்: 2 மீடியம் சைஸ் (மெலிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய்: 3 பெரியது (கீறியது)
தக்காளி: 2 மீடியம் சைஸ் (பொடியாக நறுக்கியது)
உப்பு: 1 டீஸ்பூன் (தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்)
மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை: 1 கைப்பிடி (ஃப்ரெஷ்ஷானது)
கொத்தமல்லி: சிறிதளவு (நறுக்கியது, அலங்கரிக்க)

செய்முறை

Advertisment
Advertisements

அரை கப் (125 மிலி) கடலை மாவுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து வைக்கவும். கரைத்த பிறகு, மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும். கடுகு பொரிந்ததும், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி (ஒரு துண்டு), மற்றும் நான்கு பல் பூண்டு (நறுக்கியது) சேர்க்கவும். லேசாக வதக்கவும்.

இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை மெலிதாக நறுக்கி (நறுக்கிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம்) சேர்க்கவும். மூன்று பெரிய பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். வெங்காயத்தை ஓரளவுக்கு வதக்கவும் (ரொம்ப பொன்னிறமாக வதக்கத் தேவையில்லை).

பின்னர், இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், கரைத்து வைத்த கடலை மாவு கலவையை ஊற்றவும். ஊற்றுவதற்கு முன் ஒருமுறை கலக்கி விடவும்.
ஒரு கைப்பிடி அளவு ஃப்ரெஷ்ஷான கறிவேப்பிலை சேர்க்கவும்.
 
கடாயை மூடி, அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, பாம்பே சட்னி தயாராகிவிடும். கடைசியாக, நறுக்கிய ஃப்ரெஷ்ஷான கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலக்கவும்.

சட்னியின் பதம் மிகவும் அருமையாக இருக்கும். சட்னி சூடாக இருக்கும்போதே இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் பரிமாறலாம். 

Chutney Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: