bottle gourd juice Tamil News: கோடை காலத்தில் அனைவரும் சுரைக்காயை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். இந்த காய்கறியை சாதாரணமாக உட்கொள்வதைத் தவிர, மக்கள் சுரைக்காய் கூட்டு, எண்ணெய் பொரியல், அவியல் என பல விதமாக தயார் செய்து அசத்துவார்கள். மேலும், ஜூஸ் வடிவிலும் பருகி மகிழ்வர்.
இந்த சுவையான காய்கறியில் அதிக அளவு நார்ச்சத்துடன், பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சாற்றை குடிப்பதன் மூலம், வாத, பித்த மற்றும் கபா பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இது மன அழுத்தத்தை போக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இருப்பினும், சுரைக்காயின், சாறை வெறும் வயிற்றில் குடிப்பது, உயிரிக்கேகூட ஆபத்து ஏற்படுத்தும். சில சுரைக்காயில், கசப்புதன்மை இருக்கும். இது தெரியாமல் நீங்கள் அதை சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயுத் தொல்லை ஏற்பட்டு பெங்குடலில் ரத்த போக்குவரை ஏற்பட்டும் அபாயம் உள்ளது.
சுரைக்காய்யை சாப்பிடுவதில் தவறில்லை. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதில் அதிக நார்சத்து இருக்கிறது. இது அதிக நேரம் நமக்கு பசி எடுக்க விடாது. குளுக்கோஸை உடல் எடுத்துக்கொள்வதை குறைக்கும். 96 % தண்ணீர் சத்து இருக்கிறது. இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவும். மேலும் குறைந்த சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. கொலஸ்டரால், மற்றும் வைட்டமின் சி, ரிபோபிளாவின், சிங், தைமைன், இரும்பு சத்து, மெக்னீசிஷியம், மான்கனீஸ் இருக்கிறது. உடலில் உள்ள சூடான வெப்பத்தை அது உள்வாங்கிக்கொண்டு, சிறுநீர் வழித் தடத்தில் ஏற்படும் தொற்றுகளிலிருந்து தீர்வு கொடுக்கும்.
ஆனால் நாம் முடிந்தவரை இதை சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்த வழி. பச்சையாக, சாப்பிட்டால் நிச்சயமாக கடுமையான உடல் உபாதைகள்தான் ஏற்படும். இதனால் கசப்பான சுவையில் இருக்கும் சுரைக்காய்யை தேர்வு செய்யாமல் இருப்பதுதும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்தான். உடல் எடை குறைக்க வேண்டும் என்பதற்காக இதை நான் பின்பற்ற வேண்டாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil