நாம் வீட்டில் செய்யும் உணவுகள் தீய்ந்து போவது தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் இப்படி நடந்துவுடன் உடனே அதை விண்ணாக்கி விடுவீர்கள்.இந்நிலையில் நீங்கள் வைக்கும் குழம்பு தீந்து போனால், உடனடியாக தீய்ந்த பாகத்தை சுரண்டுவதை விட்டு விடுங்கள். இப்படி செய்யும்போது, சுரண்டப்பட்ட தீய்ந்த பாகங்கள் நன்றாக இருக்கும் உணவின் ருசியை குறைக்கும்.
நெய்
லேசாக தீய்ந்துபோன உணவில் சிறிது நெய் கலந்தால் ,நெய்யின் மணம் தீய்ந்துபோன வாசனையை நீக்கிவிடும். மேலும் உணவுக்கு சுவை கூட்டும்.
க்ரீம்
பொதுவாக சில உணவுகளை சமைப்பதற்கு நாம் க்ரீம் பயன்படுத்துகி்றோம். ஆனால் தீய்ந்துபோன உணவில் பயன்படுத்தும்போது அது ஒரு வகையான சுவையை தருகிறது. க்ரீமிக்கு பதில் பாலையும் பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு
அதுபோலவே உப்பு அதிகமானால் மட்டும் உருளைகிழங்கை நாம் பயன்படுத்துவோம். ஆனால் தீய்ந்துபோனாலும் இதை பயன்படுத்தலாம்.