வெயில் காலத்தில் மோர் குடிப்பது என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நீராகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் மோரைக் குடிப்பது பிடிக்காதவர்கள் மசாலா மோர் குடிக்கலாம். அப்படி சுவையாக மசாலா மோர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
இஞ்சி- 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் 2 மேஜைக் கரண்டி தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, அரை கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்தால் சுவையான மசாலா மோர் தயார்.
மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. மோரில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடல் வறட்சியை தடுக்கும்.
மோர் எளிதில் ஜீரணமாகிவிடும். மோரில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் குடித்தால் சரியாகும்.