டைப் 2 சர்க்கரை நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பிக் குடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்று கூறப்படுகிறது. இந்த சமீபத்திய ஆய்வுகள் இந்த கருத்தை கூற சில முக்கிய காரணங்கள் இருக்குகிறது. காப்பியில் இருக்கும் கப்பைன், அதிக கலோரிகளை உடல் இழக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறைவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், 1 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆய்வில், வீக்கத்தை தடுக்கும் தன்மை காப்பியில் இருப்பதால், அது டைப் 2 சர்க்கரை நோய்யை கடுப்படுத்தும்.
ஒரு கப் அதிகமாக காப்பி குடிக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதின் சாத்தியங்கள் , 4 முதல் 6 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
அதிக நாட்களாக இருக்கும் வீக்கம், ஆக்ஸிடேடிவ் ஸ்டெஸ் டைப் 2 சர்க்கரை நோய் உருவாகக் காரணமாக இருக்கலாம். காப்பியில் வீக்கத்திற்கு எதிராக பையோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளது. உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதே டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். ஆனால் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டெஸ் , இன்சுலின் சுரப்பதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் செய்யும் மேலும் இன்சுலின் சுரப்பதை அது தடுக்கும். இந்நிலையில் இதை நாம் குடிக்கும் காப்பி தடுக்கும்.
காப்பி குடிக்க வேண்டும் என்று கூறுவதால் ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் காப்பி குடிக்கலாம் என்று அர்த்தம் இல்லை. ஒரு நாளைக்கு ஒருவர் 400 மில்லி கப்பைன் அல்லது 2 கப் காப்பிக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.
இந்நிலையில் அயல்நாடுகளில் செய்யும் ஆய்வில், அவர்களது காப்பி கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பால், சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சேர்க்கும் செயற்கை இனிப்பூடியால் எந்த பயனும் இல்லை. இதனால் நாம் குடிக்கும் காப்பியை நாம் அதிகமாக குடிக்ககூடாது.
இந்நிலையில் 100 மில்லி கிராம் கப்பைன் எடுத்துக்கொண்டால், கிட்டதட்ட 100 கலோரிகளை உடல் இழக்க இந்த கப்பைன் உதவுகிறது. நாம் எவ்வளவு முயற்சி செய்து உடல் எடையை குறைக்க உடல் பயிற்சி செய்தாலும், 200 கலோரிகளே குறையும். இதனால் பால், சர்க்கரை இல்லாமல் பிளாக் காப்பியை உடல் எடை குறைய எடுத்துகொள்ளுங்கள்.