பூசணி விதைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் குறைந்த கார்போஹைட்ரேட் அளவு இருக்கிறது. இந்நிலையில் இதில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் இ. கெரடிநாய்ட்ஸ் இருப்பதால் வீக்கத்திற்கு எதிரான குணம் இருக்கிறது.
இதில் மிகவும் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் அளவு இருப்பதால், சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவை குறைக்கிறது. 28 கிராம் பூசணியில் வெறும் 5 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது.
அதிக நார்சத்து உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவு குறையும். இந்நிலையில் 28 கிராம் பூசணி விதைகளில் 1.7 கிராம் நார்சத்து இருக்கிறது.
இந்நிலையில் இதில் மெக்னீஷியம் இருப்பதால், கார்போஹைட்ரேட் மூலம் உடல் இயக்கத்தை கட்டுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இன்சுலினை சீராக்குகிறது. இந்நிலையில் தேவையான மெக்னீஷியம் எடுத்துக்கொண்டால், இன்சுலினுக்கு உடல் ஒத்திழைக்காத தன்மை குறையும். தினமும் நாம் 37 % மெக்னீஷியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், இநிந்லையில் இது பூசணி விதைகளில் இருக்கிறது.
இந்நிலையில் தாவர வகை புரத சத்தை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரும். இந்நிலையில் புரத சத்து கார்போஹைட்ரேட் ஜீரணத்தை மெதுவாக்குகிறது. இதனால் அதிக ரத்த சர்க்கரை குறையும் மேலும் அடிக்கடி ரத்த சர்க்கரை அதிகமாகாது.
மேலும் இதில் சிங் சத்து இருக்கிறது. இந்நிலையில் 28 கிராம் பூசணி விதைகளில் 6.6 மில்லி கிராம் சிங் இருக்கிறது. சிங்க் ஒரு ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. அதே நேரத்தில் வீக்கத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது.
இந்நிலையில் இதில் ட்ரைடோபேன் இருப்பதால், நல்ல தூக்கத்தை கொடுக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிக அளவில் மெக்னிஷியத்தை எடுத்துகொள்ளும் நபர்களுக்கு டைப் 2 சர்கக்ரை நோய் ஏற்படும் அபாயம் 15 சதவிகிதம் குறைவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.