வரைட்டி ரைஸ் என்றாலே எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் சாதம் செய்வோம். இந்நிலையில் இந்த குடைமிளகாய் சாதத்தை ஒரு முறை செய்து பாருங்க. இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், பிரைடு ரைசைவிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவித்த பாசுமதி அரிசி
வரமிளகாய் – 4
பூண்டு – 10
எண்ணெய்
கருவேப்பிலை
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 2
உப்பு
மஞ்சள் தூள்
தக்காளி – 2
செய்முறை: பாசுமதி அரிசியை வேக வைத்து எடுத்துகொள்ளுங்கள். அதிகமாக கொழையாமல், உதிரியாக அவித்து கொள்ளுங்கள். வரமிளகாய் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து எடுத்துஜ்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும், தொடர்ந்து தக்காளி நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து குடைமிளகாய் நறுக்கியதை சேர்க்கவும். எல்லாவற்றையும் உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து, அதில் வரமிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும். 6 முதல் 8 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் பொடியை சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக பாசுமதி சாதத்தை சேர்த்துகொள்ளுங்கள். எல்லாவற்றை ஒருசேர கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“