இரவில் நாம் தூங்கப்போகும் முன்பு பால் குடிப்போம். ஆனால் அதில் நாம் ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் நன்மை உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஏலக்காயை நாம் டீயில் சேர்த்து குடிப்போம். இந்நிலையில் ஏலக்காய்யில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருக்கிறது. நாம் குடிக்கும் பாலில் சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை குறைக்கும் . மேலும் பதற்றத்தை குறைத்து தூக்கத்தை கொடுக்கும்.
மேலும் ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. மேலும் உடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
பாலில் எப்படி சேர்க்க வேண்டும்
பாலில் இரண்டு ஏலக்காயை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வடிகட்டி குடிக்கலாம்.
மேலும் ஏலக்காயில் கார்போஹைட்ரேட்,நார்சத்து, கால்சியம், பொட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும் வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், தோல் சார்ந்த தொற்றுகள் குணமடைய உதவுகிறது
பாலை போல், வெதுவெதுப்பான நீரில் ஏலாக்காய் சேர்த்து,அதையும் தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம்.