காலை உணவாக ஒரு தோசைக்கு இவ்ளோ பொரியல்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்

காலை உணவின்போது தோசைக்கு எப்பவும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு நாக்கு வரண்டுவிட்டதா கேரட், பீன்ஸ், பட்டாணி கலந்து மிக்ஸ்டு பொரியல் செய்து சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா 3 தோசைகள் சாப்பிடலாம். மிக்ஸ்டு பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

காலை உணவின்போது தோசைக்கு எப்பவும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு நாக்கு வரண்டுவிட்டதா கேரட், பீன்ஸ், பட்டாணி கலந்து மிக்ஸ்டு பொரியல் செய்து சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா 3 தோசைகள் சாப்பிடலாம். மிக்ஸ்டு பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

காலை உணவின்போது தோசைக்கு எப்பவும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு நாக்கு வரண்டுவிட்டதா கேரட், பீன்ஸ், பட்டாணி கலந்து மிக்ஸ்டு பொரியல் செய்து சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா 3 தோசைகள் சாப்பிடலாம். மிக்ஸ்டு பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

2 கேரட், 100 கிராம் பீன்ஸ், 1/4கப் பச்சை பட்டாணி, 5 சாம்பார் வெங்காயம்

தாளிக்க: 1 டீஸ்பூன் எண்ணெய், 1/4 டீஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன் உளு்த்தம் பருப்பு, 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு, கறிவேப்பிலை, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், உப்பு தேவையான அளவு

Advertisment
Advertisements

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும். நறுக்கிய காய்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கள், பச்சை மிகாயையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். தயாரான பொரியலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது கேரட் பீன்ஸ் பட்டாணி பொரியல் சுவைக்கத் தயார். காலை உணவின்போது தோசைக்கு வைத்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: