கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படி பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் சுவையாகவும் இருக்குற மாதிரியான கேரட் லட்டு எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரி பருப்பு திராட்சை ரவா - 2 மேசைக்கரண்டி கேரட் - 500 கிராம் தேங்காய் - 1/2 கப் சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் நெய் எடுக்கவும். முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவற்றை ஒதுக்கி வைக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து அதில் ரவையை வறுக்கவும்.
கடாயில் துருவிய கேரட்டை சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு, வாணலியில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். நெய் சேர்த்து, அனைத்தையும் மீண்டும் நன்கு கலக்கவும். கடாயை ஒரு மூடியால் மூடி வைக்கவும். குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
கேரட் வெந்ததும், சர்க்கரை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும். பிறகு ஏலக்காய் தூள், வறுத்த பருப்புகள் மற்றும் திராட்சை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். ஈரப்பதம் இல்லாத பிறகு, வெப்பத்தை அணைத்து, கேரட் கலவையை சிறிது குளிர்விக்கவும். இதனை உங்களுக்கு பிடித்த மாதிரி உருண்டைகளாக உருட்டவும்.
அவ்வளவுதான் சுவையான கேரட் லட்டு ரெடி. இந்த சம்மரில் பிள்ளைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுங்கள்.