காரசாரமான காரக்கடலை ரெசிபியை இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை சிலர் நெய்க்கடலை என்றும் கூறுவார்கள்.
தேவையான பொருள்கள்:
கால் கிலோ கடலை பருப்பு,
10 பூண்டுகள்,
கறிவேப்பிலை,
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்,
அரை டீஸ்பூன் உப்பு,
கால் டீஸ்பூன் பெருங்காய தூள்
செய்முறை:
கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் 15 நிமிடங்கள் ஃபேன் காற்றில் காய வைக்க வேண்டும். இதையடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, சுமார் 70 சதவீதம் சூடானதும், அதில் கடலை பருப்பை சேர்த்து மீடியம் ஹீட்டில் வைத்து பொறிக்க வேண்டும். இதன் பின்னர், கடலை பருப்பை தனியாக எடுத்து விடலாம். பின்னர், 10 பூண்டுகளை எடுத்து அதே எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். இறுதியாக, அடுப்பை ஆஃப் செய்து விட்டு அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையை பொறிக்க வேண்டும். இதன் பின்னர், கடலை பருப்புடன் மிளகாய் தூள், உப்பு,பெருங்காய தூள், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான ஸ்நாக்ஸ் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“