சப்பாத்தி முதல் பூரி வரை இந்த ஒரு சென்னா மசாலா போதும். சுவை சூப்பரா இருக்கும் மறக்காம டிரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
சீரகப் பொடி
கொத்தமல்லி பொடி
கரம் மசாலா
பச்சை மாங்காய் பொடி
சீரகம்
தக்காளில் 2 அரைத்தது
வேகவைத்த கொண்டக்கடலை
அவித்த உருளைக்கிழங்கு ஒன்று
செய்முறை: கொண்டக்கடலை தண்ணீர் விட்டு, வேக வைக்க வேண்டும். ஒரு உருளை கிழங்கையும் நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். தற்போது ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி, சீரகப் பொடி, கொத்தமல்லி பொடி, பச்சை மாங்காய் பொடி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் ஒரு பாத்திரத்தை சூடு செய்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு,வதகக் வேண்டும் தொடர்ந்து இந்த கரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும். தொடர்ந்து அதில தக்காளி அரைத்தது, சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில அவித்த கொண்டக்கடலை, சேர்க்கவும், தொடர்ந்து உப்பு சேர்க்கவும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கை நறுக்கி சேர்க்கவும். கொண்டக்கடலை அவித்த தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil