மீதமான சாதத்தை வைத்து என்ன செய்வது என்று நாம் யோசிப்போம். மீதமான சாதத்தை எவ்வளவு நாள் பழையது செய்து சாப்பிடுவது என்று நினைப்போம். இந்நிலையில் மீதமான சாதத்தை வைத்து சப்பாத்தி செய்ய முடியும். சாதத்தில் எப்படி சப்பாத்தி செய்வது என்பதை தெரிந்திகொள்வோம்.
மிச்சிய சாதம் ஒரு கப் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் இந்த சாதத்தை சேர்த்து அதனுடன் கால் கப் அளவிற்கு மைதா மாவு மற்றும் கால் கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவு மட்டுமே சேர்க்கலாம். பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த விழுதில் சாதம் சேர்த்திருப்பதால் கைகளில் ஒட்டும் அளவிற்கு இருக்கும். இப்போது இதனுடன் தேவையான அளவிற்கு கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசைய வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். கை விரல்களை மடக்கி பின்புறமாக நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொடுங்கள்.
கோதுமை மாவை பிசையும் பொழுது எவ்வளவு சாப்டாக இருக்குமோ, அதே போல நல்ல மிருதுவாக மாவு கைகளில் ஒட்டாதபடி வந்த பிறகு மீண்டும் ஒருமுறை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு மாவை தேய்த்து சப்பாத்திக்கு தட்டுவது போல சப்பாத்தியை தேய்க்க வேண்டும். வட்டமாக சப்பாத்தியை தேய்த்து பின்னர் சுட்டு எடுத்தால் சூப்பரான சப்பாத்தி சுடச்சுட ரெடியாகிவிடும்.