New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/06/ZTS5jSOZWrGmeteVKQkd.jpg)
சண்டே ஸ்பெஷல் மலபார் சிக்கன் செஃப் தாமு ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கொஞ்சம் தான் சிக்கன் இருக்கு ஆனால் சுவையான ரெஸிபி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் செஃப் தாமு ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மலபார் சிக்கன் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சண்டே ஸ்பெஷல் ஆக அதை நாமும் ட்ரை செய்யலாமே.
தேவையான பொருட்கள்
வர மிளகாய்
சீரகம்
தேங்காய் எண்ணெய்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தேங்காய்
மிளகாய் தூள்
மிளகு தூள்
மஞ்சள்தூள்
தேங்காய் பால்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்னர் அதில் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் நீங்கியதும் நறுக்கிய தக்காளி, தேங்காய் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் குடைமிளகாய், மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சிக்கனை சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து வந்ததும் அதில் தேங்காய் பால் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் மலபார் சிக்கன் ரெடி ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.