உளுந்து 3 மணி நேரம் ஊறவைத்து இப்படி அரைத்தால்... கிரிஸ்பியான மெது வடை ரெடி; செஃப் தாமு ரெசிபி

செஃப் தாமு ஸ்டைலில் சம்மர் ஸ்பெஷலாக உளுந்து வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செஃப் தாமு ஸ்டைலில் சம்மர் ஸ்பெஷலாக உளுந்து வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
urad dal

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.

அப்படியாக செஃப் தாமு ஸ்டைலில் உளுந்து வடை எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

தேவையான பொருட்கள்:

Advertisment
Advertisements

உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1  
பச்சை மிளகாய் - 2  
இஞ்சி - 1 சிறிய துண்டு 
மிளகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை  
உப்பு  
எண்ணெய்  

செய்முறை:

உளுந்தை நன்றாக கழுவி, 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்க்கவும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். எண்ணெயை கடாயில் சூடாக்கவும். மாவை வடை வடிவத்தில் தட்டி எண்ணெயில் போடவும். பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் சூடான மெதுவடை தயாராகிவிடும். 

Reasons to eat urad dal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: