எந்தத் தூளும் வேணாம்... இடியாப்பத்துக்கு இத விட பெஸ்ட் சைடிஷ் இல்ல: செஃப் தீனா ரெசிபி
இடியாப்பம் கூட செய்து விடலாம் ஆனால் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பது தான் மிகப்பெரிய டாஸ்க். ஏனென்றால் இங்கு நிறைய பேருக்கு இடியாப்பத்துக்கு சைடிஷ் செய்ய தெரியாது. ஆனால் அவர்களுக்காகவே ஈஸியான ஒரு சைடிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இடியாப்பம் கூட செய்து விடலாம் ஆனால் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பது தான் மிகப்பெரிய டாஸ்க். ஏனென்றால் இங்கு நிறைய பேருக்கு இடியாப்பத்துக்கு சைடிஷ் செய்ய தெரியாது. ஆனால் அவர்களுக்காகவே ஈஸியான ஒரு சைடிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
எப்பவும் ஒரே மாதிரி டிஷ் செய்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட பிடிக்காமலேயே போய்விட்டதா. அப்போ கொஞ்சம் டைம் எடுத்து நல்ல டிஷ்ஷா செய்வதற்கு இதுதான் சரியான நேரம். ஏனென்றால் பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை விட்டாச்சு. இனிமே காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்ற கவலை சற்று குறைந்திருக்கும். எனவே நேரம் எடுத்து நல்ல சமையலாக செய்து கொடுங்கள்.
Advertisment
அதுவும் விதவிதமான டிஷ் செய்து கொடுக்கும்போது உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
அப்படியான ஒரு டிஷ் தான் ஆட்டுக்கால் பாயா. நிறைய பேருக்கு இதை எப்படி செய்வது என்று தெரியாது. இடியாப்பம் செய்து விடுவார்கள் ஆனால் பாயா வைக்க தெரியாமல் அதற்கு தேங்காய் பால் ஊற்றி சாப்பிடுவார்கள். அப்படி இருப்பவர்கள் எல்லாம் இனிமேல் செஃப் தீனா ஸ்டைலில் சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லாத ஊர் என்றால் மதுரை தான் இந்த ஆட்டுக்கால் பாயா கூட மதுரை ஸ்டைலில் தான் செய்யப் போகிறோம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால் கசகசா, பாதாம், முந்திரி பேஸ்ட் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு கசகசா முந்திரி பாதாம் சோம்பு பட்டை லவங்கம் ஏலக்காய் அன்னாசிப்பூ பிரியாணி இலை பச்சை மிளகாய் கருவேப்பிலை புதினா இலை கொத்தமல்லித்தழை தேங்காய் பால் உப்பு தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஆட்டுக்காலை முதலில் குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இலை அண்ணாச்சி பூ, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் வேகவைத்து வைத்துள்ள ஆட்டுக்காலையும் சேர்த்து கலந்து விடவும்.
அரைத்து வைத்துள்ள முந்திரி, கசகசா பேஸ்டையும் இதில் சேர்க்க வேண்டும். பின்னர் இது நன்கு கொதி வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் கொத்தமல்லி மற்றும் புதினா தலைகளை மேலே தூவி இறக்கலாம். அவ்வளவுதான் இடியாப்பத்திற்கு தேவையான ஆட்டுக்கால் பாயா தயாராகிவிடும்.