/indian-express-tamil/media/media_files/2025/04/17/CaLgNuAn9ICx926sPgwt.jpg)
ரைஸ் தம் கட்டி காஞ்சிபுரம் ஸ்டைலில் பிரிஞ்சி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் .செஃப் தீனா இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு சமைக்கும் முறை குறித்து பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கிலோ
வெங்காயம் - 800 கிராம்
தக்காளி - 800 கிராம்
இஞ்சி விழுது - 200 கிராம்
பூண்டு விழுது - 100 கிராம்
எண்ணெய் - 300 மில்லி
வளைகுடா இலை, சினமோன், கிராம்பு &
ஏலக்காய் - 10 கிராம்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
புதினா இலைகள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 20 கிராம்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி - 200 கிராம்
நெய் - 100 கிராம்
தயிர் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு
பீன்ஸ், கேரட், பெல் பெப்பர்,
காலிஃப்ளவர், டர்னிப் - 1 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 10
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை போடவும். பின்னர் நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் அதில் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
அடுத்ததாக இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். அடுத்ததாக இதில் தயிர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை அனைத்தும் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விட்டு வேக விடவும். பின்னர் தண்ணீர் சமமாக இருக்கும் வரை வெந்ததும் மூடி வைத்து தம் போட ஆரம்பிக்கவும். பின்னர் மேலே கொத்தமல்லி தலைகளை தூவி, நெய் பரவலாக ஊற்றி இறக்கினால் சுவையான பிரிஞ்சி சாதம் ரெடி ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us