/indian-express-tamil/media/media_files/2025/04/23/Ja1M2qKwsR8IR8lIipNF.jpg)
சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அதற்காக நாமும் புதிது புதிதாக ட்ரை பண்ணி கொண்டே தான் இருப்போம். அப்படி புதிதாக ட்ரை பண்ண கூடிய ஒரு டிஷ் தான் செஃப் தீனா ஸ்டைல் சின்ன வெங்காயம் பூண்டு குழம்பு. இதனை செஃப்தீனா தனது யூடியூப் பக்கத்தில் விரிவாக கூறி இருக்கிறார்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்
வெந்தயம் - 500 கிராம்
பூண்டு - 250 கிராம்
கடுகு - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 50 கிராம்
கொத்தமல்லித்தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - 20 கிராம்
வெல்லம் - ஒரு சிறிய துண்டு
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை
புளி - 250 கிராம்
எண்ணெய் - 300 மிலி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 100 கிராம்
கொத்தமல்லி விதைகள் - 300 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
எண்ணெய் - 50 மிலி
உப்பு
செய்முறை
சின்ன வெங்காயத்தை வைத்து சுவையான பூண்டு குழம்பு செஃப் தீனா ஸ்டைலில் நீங்களும் இனி வீட்டிலேயே ட்ரை பண்ணலாம். இந்த குழம்புடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, கொத்தமல்லி, வெந்தயம், வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக இதில் பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி வேக விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து வரும் போது அரைத்து வைத்துள்ள பொடியை மேலே சேர்க்கவும். சுவையை கூட்டி கொடுக்க கொஞ்சமாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
குழம்பு கொதித்து நல்ல வாசனை வந்ததும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாற ஆரம்பிக்கலாம். சுடு சாப்பாட்டுடன் பொறித்த அப்பளம் சேர்த்து பரிமாறலாம் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us