கொங்கு நாட்டு ஸ்டைல் உணவு என்றால் அதற்கு தனி சுவை இருக்கும். அப்படியாக ஈரோடு ஸ்டைலில் அசத்தலான ஒரு நாட்டுக்கோழி பிரியாணி எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். அந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
நாட்டுக் கோழி சீரக சம்பா அரிசி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பெருஞ்சீரகம் கல்பாசி நட்சத்திர சோம்பு மராத்தி மொக்கு இலவங்கப்பட்டை கிராம்பு ஏலக்காய் கடலை எண்ணெய் நெய் தயிர் எலுமிச்சை இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி இலை புதினா இலைகள் கரம் மசாலா காய்ந்த மிளகாய் தூள் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியில் இந்த அரைத்து வைத்ததை சேர்த்து சுவைக்கு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் பிரியாணி செய்ய ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நெய் போட்டு சூடானதும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், கல்பாசி, ஜாதிபத்திரி, அன்னாசிப்பூ, சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து வேகவிடவும். நன்கு வந்து வாசனை வந்ததும் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
பாதி வெந்ததும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிவரும் போது அதில் ஊற வைத்து வைத்துள்ள அரிசியை போட்டு இப்போது தம் போட வேண்டும்.
அதற்கு முதலில் பிரியாணி மேலே கொத்தமல்லி தலைகளை தூவி விட்டு அதன்மேல் வாழை இலைகளை வைத்து மூடி விடவும். இதனை எடுத்து ஒரு தோசைக்கல் மீது வைத்து தண்ணீரோ அல்லது வெயிட் ஏதாவது வைத்து தம் போடவும். தம் போட்டு இறக்கியதும் இதனை எடுத்து கிளறி பரிமாறலாம். தயிர் பச்சடி நாட்டுக்கோழி கிரேவி வைத்தும் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.