/indian-express-tamil/media/media_files/2025/05/12/sMKfhpVsYfs2Hba0B9BV.jpg)
இனி முடி உதிர்வுக்கு கவலை வேண்டாம். செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு ஸ்பெஷல் சட்னி ரெசிபி பற்றி கூறுகிறார். இந்த சட்னியை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் மற்றும் அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம்
கொத்தமல்லி
சீரகம்
மிளகு
வர மிளகாய்
பூண்டு
புளி
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும், தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும், பூண்டு பற்களை சேர்க்கவும்.
வெங்காயம் மற்றும் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு, கறிவேப்பிலையை சேர்க்கவும். கறிவேப்பிலை சுருங்கும் வரை வதக்கவும். அதன்பின், வர மிளகாயை சேர்த்து லேசாக வதக்கவும். கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும். அதிக நேரம் வறுக்க வேண்டாம்.
வதக்கிய பொருட்களை ஆற வைக்கவும். ஆறியவுடன், மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
அவ்வளவு தான் அரைத்து எடுத்தால் சுவையான கருவேப்பிலை சட்னி தயார். தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம். இதனை இட்லி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.
இந்த சட்னி கெட்டியாக இருந்தால் சுவையாக இருக்கும். சீரகம் அதிகமாக சேர்ப்பதால் புளித்தன்மை குறைவாக இருக்கும், மேலும் நல்ல மணத்தைக் கொடுக்கும். கல்லில் ஆட்டினால் சட்னி இன்னும் ருசியாக இருக்கும். காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.