/indian-express-tamil/media/media_files/2025/05/15/0xUVDVN63uicyxyAkH0y.jpg)
கல்யாண வீடுகளில் பந்திகளில் வைக்க கூடிய அன்னாசிப்பழம் கேசரி சுவையாக நாவில் வைத்ததும் கரையும் அளவிற்கு எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். சம்மர் விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட ஒரு முறை இதனை செய்து தரலாம். சுவையாகவும் பார்த்ததும் சாப்பிட தோன்றும். அவ்வளவு சுவையான அன்னாசி கேசரி எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருக்கிறார்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கிலோ
சர்க்கரை - 2 கிலோ
முந்திரி பருப்பு - 200 கிராம்
உலர் திராட்சை - 100 கிராம்
டுட்டி ஃப்ரூட்டி - 100 கிராம்
செர்ரி - 100 கிராம்
அன்னாசி - 2 எண்ணிக்கை
குங்குமப்பூ - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 லிட்டர்
செய்முறை:
அன்னாசி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் உலர் திராட்சையையும் வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் ரவையை சேர்த்து லேசாக வறுக்கவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் குங்குமப்பூவை சேர்த்து கரைக்கவும்.
வறுத்த ரவையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கட்டி பிடிக்காதவாறு கிளறவும். ரவை நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை கரைந்து கேசரி கெட்டியாக வரும் வரை கிளறவும்.
வெட்டிய அன்னாசி துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும். கடைசியாக வறுத்த முந்திரி, உலர் திராட்சை, டுட்டி ஃப்ரூட்டி மற்றும் செர்ரி சேர்த்து அலங்கரிக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான அன்னாசி கேசரி பரிமாற தயாராக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.