கோயம்புத்தூரில் மனோன்மணி அக்காவுடன் இணைந்து, வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கியமான கோதுமை போண்டா தயாரிக்கும் முறையை பற்றி செஃப் தீனா தனது யூடியுப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். ஈரோடு, சேலம் போன்ற கொங்குப் பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு முறை செய்யப்படும் இந்த போண்டா, உடனடி ஸ்நாக்ஸ் ஆகவும், ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
Advertisment
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு: ½ கிலோ (ரேஷன் கடையில் வாங்கிய மாவும் பயன்படுத்தலாம்) பழைய இட்லி மாவு: 2 கரண்டி (போண்டா உப்பி வரவும், மென்மையாக இருக்கவும்) வெங்காயம்: 3 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது) கேரட் (துருவியது): 2 கைப்பிடி அளவு முட்டைக்கோஸ் (துருவியது): 2 கைப்பிடி அளவு பச்சை மிளகாய்: காரத்திற்குத் தகுந்தாற்போல் கறிவேப்பிலை, கொத்தமல்லி: தேவையான அளவு உப்பு: தேவையான அளவு சீரகம்: 1 ஸ்பூன் (செரிமானத்திற்கும், வாசனைக்கும்) எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
வீட்டில் பீன்ஸ் போன்ற வேறு காய்கறிகள் இருந்தாலும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். காய்கறிகள் இல்லையென்றாலும், வெறும் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்தும் செய்யலாம். கோதுமை மாவு சப்புன்னு இருப்பதை ஈடுகட்டவும், போண்டா மென்மையாகவும், உப்பி வரவும் இட்லி மாவு சேர்க்கப்படுகிறது. இது சோடா மாவுக்குப் பதிலாகச் செயல்படுகிறது. பழைய மாவு அல்லது புளித்த மாவு கூட பயன்படுத்தலாம்.
முதலில் கோதுமை மாவு, நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து, காய்கறிகளில் உள்ள தண்ணீரிலேயே நன்கு பிசைய வேண்டும். உப்பு எல்லா இடத்திலும் பரவ இது உதவும். பிறகு, 2 கரண்டி இட்லி மாவைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாக, ஆனால் போண்டாவாகப் போடும் பக்குவத்தில் பிசைய வேண்டும். மாவு மிகவும் நீர்த்தால் எண்ணெய் குடிக்கும், மிகவும் கெட்டியாக இருந்தால் வேகாது. கடலை மாவைப் போல கோதுமை மாவு கெட்டியாகாது என்பதால், இட்லி மாவு சேர்ப்பது போண்டாவை மென்மையாக்கும்.
வாணலியில் கோல்ட் வின்னர் எண்ணெயைச் சூடாக்கி, மிதமான தீயில் வைத்து, கையைத் தண்ணீரில் தொட்டுத் தொட்டு, உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட வேண்டும். மெதுவாகப் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் உள்ளே வேகாது, வெளியுள் கருகிவிடும். கோதுமை போண்டா சரியாக வெந்தவுடன் ஓட்டைகளுடன் இருக்கும்.
மழைக்காலங்களில் சுடச்சுட கோதுமை போண்டாவை, காரமான தேங்காய் சட்னியுடன் (புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த காரச் சட்னி) சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். டீ அல்லது காபியுடன் சாப்பிடவும் இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.