நாக்கில் வச்சு உடனே கரையும்... மதுரை பேமஸ் பன் அல்வா: செஃப் தீனா ரெசிபி
நாக்கில் வைத்தவுடன் கரையக்கூடிய அளவிற்கு மதுரையில் மிகவும் பேமஸாக உள்ள பன் அல்வா எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
நாக்கில் வைத்தவுடன் கரையக்கூடிய அளவிற்கு மதுரையில் மிகவும் பேமஸாக உள்ள பன் அல்வா எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
மதுரை கல்யாண வீடுகளில் சிறப்பு விருந்தாகப் பரிமாறப்படும் 'பன் அல்வா' தனித்துவமான சுவைக்காகவும், மொறுமொறுப்பான தன்மைக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றது. ரஸ்க் மற்றும் நெய்யின் கலவையில் உருவாகும் இந்த சுவையான அல்வாவை வீட்டிலேயே எளிதாக எப்படி தயாரிக்கலாம் என்று செஃப் தீனா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ரஸ்க் எண்ணெய் நெய் முந்திரி சர்க்கரை ஏலக்காய்த்தூள் வெள்ளரி விதை
செய்முறை:
மதுரை கல்யாண வீடுகளில் பன்னல்வா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கடினமான ரஸ்கை எடுத்துக் கொள்ளவும். இந்த ரஸ்க்கை மிக்ஸியில் பொடி செய்து, ரவை போன்ற நிலைத்தன்மையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பாரம்பரியமாக, ரஸ்க் உரலில் இடிக்கப்பட்டது. இது அல்வாவை சாப்பிடும்போது சற்று மொறுமொறுப்பான சுவையைத் தரும்.
Advertisment
Advertisements
ஒரு பெரிய கடாயில் கோல்ட் வின்னர் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து, அதிகச் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகச் சூட்டில் ரஸ்கைப் போட்டால் கருகிவிடும். அரைத்த ரஸ்க் பொடியை மெதுவாக எண்ணெயில் சேர்க்கவும். ஒரே நேரத்தில் அனைத்தையும் கொட்டாமல் மெதுவாகச் சேர்க்கவும், ஏனெனில் இது கட்டிப்படாமல் இருக்க உதவும். பொடியை மிதமான சூட்டில், தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே வறுக்க வேண்டும்.
வறுத்த ரஸ்க் பொடியில் சர்க்கரையைச் சேர்க்கவும். பொதுவாக, ஒரு கிலோ ரஸ்கிற்கு இரண்டு கிலோ சர்க்கரை சேர்க்கப்படுகிறது. சர்க்கரை லேசாகக் கரையும் வரை கிளறவும். சர்க்கரை முழுமையாகக் கரையாமல் சற்று பாகுபோல இருக்கும்போது, கொதிக்கும் நீரைச் சேர்க்கவும். குளிர்ந்த நீர் சேர்ப்பது வெப்பநிலையை மாற்றிவிடும் என்பதால் சூடான நீரைப் பயன்படுத்தவும்.
கலவையை அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, தீயைக் குறைக்கவும். அல்வா 90% கெட்டியான பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். ஒரு தனி கடாயில் நெய்யை சூடாக்கி, முந்திரி மற்றும் வெள்ளரி விதைகளைச் சேர்க்கவும்.
முந்திரி மற்றும் வெள்ளரி விதை பொன்னிறமானதும், அதை அல்வாவில் சேர்க்கவும். பன் அல்வா சூடாக இருக்கும் போது ஒரு இலையில் வைத்து பரிமாறவும். இது மிகச் சுவையாக இருக்கும். இந்த அல்வாவை ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம், ஆனால் புதியதாக இருக்கும் போது அதன் சுவை நன்றாக இருக்கும்.