தோல் இல்லாமல் தக்காளி சட்னி... கோவை பக்கம் ரொம்ப பேமஸ்; இட்லி, தோசைக்கு அப்படி இருக்கும்: செஃப் தீனா ரெசிபி
தோல் இல்லாமல் இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். கோவையில் மிகவும் ஃபேமஸ் ஆன இந்த சட்னியை இனி உங்கள் வீடுகளிலும் செய்யலாம்.
தோல் இல்லாமல் இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். கோவையில் மிகவும் ஃபேமஸ் ஆன இந்த சட்னியை இனி உங்கள் வீடுகளிலும் செய்யலாம்.
கொங்கு மண்டலம் அதன் தனித்துவமான சமையல் முறைக்கு மிகவும் பிரபலமானது. அவற்றில் ஒன்றுதான் அனைவரும் விரும்பி உண்ணும் தக்காளி தண்ணி சட்னி. கோயம்புத்தூர் ஸ்டைலில் இந்த தக்காளி தண்ணி சட்னி எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி சமையல் எண்ணெய் கடுகு சீரகம் கறிவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் உப்பு நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், நன்கு பழுத்த தக்காளிப் பழங்களை தண்ணீரில் போட்டு, தோலை உரிக்கும் வரை கொதிக்க விடுங்கள். பின்னர், தோலுரித்த தக்காளியை ஆறவைத்து, மிக்ஸியில் அல்லது பாரம்பரிய முறையில் அம்மியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த முறை சட்னிக்கு ஒரு தனித்துவமான சுவையையும், கெட்டித்தன்மையையும் தரும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயத்தை அதிகம் சேர்ப்பது சட்னியின் சுவையை மேம்படுத்தும்.
வதக்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லி தூள் சட்னிக்கு கூடுதல் கெட்டித்தன்மை கொடுக்கும். உங்களுக்கு அடிப்படை மசாலாப் பொடிகள் இல்லையென்றால், சாம்பார் பொடியைக் கூட பயன்படுத்தலாம்.
சட்னி ஓரளவு கெட்டியாகி, பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
இந்தத் தக்காளி தண்ணி சட்னி, சூடான இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் ஆப்பம் போன்ற பலகாரங்களுடன் பரிமாற மிகவும் ஏற்றது. குறிப்பாக, சூடான இட்லியின் மேல் தாராளமாக ஊற்றி, இட்லியுடன் கலந்து சாப்பிடும்போது இதன் சுவை கூடுதலாக இருக்கும்.