இந்த பச்சை பயறு குழம்ப ஒரு முறை செய்தால் போதும் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட வேண்டும் என தோன்றும். செஃப் பட் சொன்ன மாதிரி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சை பயறு
1 ஸ்பூன் சீரகம்
4 பச்சை மிளகாய்
ஒரு கை பூண்டு
2 வெங்காயம்
2 தக்காளி
2 ½ டீஸ்பூன் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் தனியா தூள்
1 ½ ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு
2 ஸ்பூன் கொத்தமல்லி இலை
1 ஸ்பூன் பட்டர்
செய்முறை: பச்சை பயறை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து குக்கரில், 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி நறுக்கியதை சேர்க்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி- பூண்டு விழுதை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, தனியாத் தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து நன்றாக கிரேவி பதத்திற்கு, அளவில் குறைய வேண்டும். தொடர்ந்து இதில் அவித்த பயறை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். கடைசியாக பட்டர் சேர்த்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“