டெல்லியில் சாலையோர கடைகளில் கிடைக்கும் பட்டாணி மசாலா மற்றும் சுவையான ரொட்டி எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். சம்மர் விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக இதை செய்து கொடுங்கள் சுவையாக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வேகவைத்த வெள்ளை பட்டாணி நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய தக்காளி நறுக்கிய வெங்காயம் கருப்பு உப்பு சாதாரண உப்பு கரம் மசாலா பச்சை சட்னி இனிப்பு சட்னி எலுமிச்சை சாறு கருப்பு மிளகு தூள் ரொட்டி ஹட்சன் வெண்ணெய் காஷ்மீர் மிளகாய் தூள் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கிண்ணத்தில் வேகவைத்த வெள்ளை பட்டாணியை சேர்க்கவும். நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும். பின்னர் இதில் பச்சை சட்னி மற்றும் இனிப்பு சட்னி சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும். சுவைக்கு கருப்பு மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
ரொட்டியை நான்கு துண்டுகளாக வெட்டவும். ஒரு தட்டையான கடாயை சூடாக்கவும். கடாயில் ஹட்சன் வெண்ணெய் தடவவும். வெண்ணெயில் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். ரொட்டி துண்டுகளை கடாயில் வைத்து மற்றும் மேல் பக்கத்தில் வெண்ணெய் தடவவும்.
ரொட்டி இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். மசாலாவை ஒரு கிண்ணத்தில் வைத்து, வறுத்த ரொட்டி துண்டுகளுடன் சேர்த்து சாப்பிட் ஆரம்பிக்கலாம். தேவைக்கு சுவைக்கும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.