New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project51.jpg)
செட்டிநாடு ஸ்டைல் சாம்பார் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, வேகவைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, தேவையான காய்கறி ஆகியவற்றை தனியாக நறுக்கவும். அடுப்பில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் நறுக்கிய காய்கறி பொருட்களை சேர்க்கவும். காய்கறி வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் சேருங்கள். அத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேருங்கள். பச்சை வாசனைபோகக் கொதி வந்ததும், வேகவைத்த பருப்பை அதன் மேல் நிற்கும் தண்ணீரை வடித்துவிட்டு கரைத்து சேருங்கள்.
அடுத்து மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளித்து கொட்டி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான சாம்பார் ரெடி. இந்த சாம்பார் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் இலகுவாக தண்ணீர் போல் இருந்தால் குழைந்த சாப்பாட்டிற்கு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.