நீங்கள் பெரும்பாலான நேரங்களில் அசைவ உணவை குறிப்பாக, சிக்கனை சமைக்குபோது அதிக தவறுகள் செய்கிறோம். இந்த தவறுகளால் அசைவ உணவை நாம் தேர்வு செய்வதை நாம் தவிர்க்கிறோம். நாம் சிக்கன் சமைக்கும்போது இந்த தவறுகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
குளிரூட்டப்பட்ட கறி
நாம் புதிதாக வெட்டப்பட்ட சிக்கன் கறியை வாங்கினால், நாம் சமைக்கும்போது நல்ல சுவையுடன் இருக்கும். குளிரூட்டப்பட்ட கறியை சமைத்தால், நாம் வைக்கும் குழம்போ, சுக்காவோ வரண்டு போய் இருக்கும்.
போன்லஸ் சிக்கன்
நாம் சிக்கன் வாங்கும்போது அதை எலும்போடு வாங்க வேண்டும். அதன் எலும்பில் இருக்கும் கொடுப்பு, நாம் சமைக்கும் உணவுக்கு ஒரு தண்ணீர் பதம் தருகிறது. இதனால் நாம் சமைக்கும் சிக்கன் சுவையாக இருக்கும். போன்லஸ் சிக்கனில் இந்த சுவையை நாம் எதிர்பார்க்க முடியாது.
கழுவுதல்
சிக்கனை நாம் முறையாக கழுவ வேண்டும். 4 முறையாவது ஓடும் நீரில், சிக்கனை நாம் கழுவ வேண்டும். இதனால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். சிக்கனை நன்று அழித்தால்தான், அதில் இருக்கும் பாக்டீரியா நீங்கும்.
மசாலாவில் ஊறவைப்பது.
நாம் சிக்கனை சமைக்கும் முன்பு எப்போதும், நாம் தயாரித்து வைத்திருந்த மசாலாவில் அதை சில மணி நேரம் ஊரவைக்க வேண்டும். இதனால் சுவை கூடுதோடு, கறியில் உள்ள ஈரப்பதம் நீங்காமல் இருக்கும்.