என்னதான் வீட்டில் விதவிதமாக செய்து கொடுத்தாலும் கடைகளில் சாப்பிடுவது போல இல்லை என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் கடைகளில் சமைப்பது போலையே வீட்டிலேயும் சமைக்கலாம். அப்படி கடைகளில் கிடைக்கும் சில்லி பரோட்டா புதுவிதமான ஒரு ஸ்டைலில் டிபன் ரெசிபியாக எப்படி செய்வது என்று குறிஞ்சி டாட் காம் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
இது செய்ய கோதுமை மாவு போதும் கோதுமை மாவு உடலுக்கும் நல்லது. எனவே இப்படி செய்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் கிடைக்காது. இனி கடைகளில் வாங்கி சாப்பிடாமல் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
கோடை விடுமுறையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் மாதிரியும் செய்து கொடுக்கலாம் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கோதுமை மாவு உப்பு எண்ணெய் வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் கரம் மசாலா கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே நன்கு பிசைந்ததும் இதை எடுத்து உருட்டி சப்பாத்தி மாதிரி தேய்க்கவும். பின்னர் இந்த தேய்த்த மாவின் மீது எண்ணெய் தடவி மடக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் இவற்றை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். பொறித்து எடுத்த மாவு பப்ஸ் மாதிரி உடையும் எனவே அதனை எடுத்து தனியாக வைத்து விடவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி அதில் பொறித்து வைத்துள்ளதை மசாலாவுடன் சேர்த்து பிரட்டி விடவும்.
அவ்வளவுதான் பொரித்த கோதுமையுடன் இதை சேர்த்தால் சாப்டாகவும் க்ரன்சியாகவும் மசாலா உள்ளே இறங்கி சுவையாக இருக்கும். இதன் சுவையை இன்னும் கூட்ட மேலே கொத்தமல்லி தலைகளையும் வெங்காயத்தையும் நறுக்கி சேர்க்கலாம்.