/indian-express-tamil/media/media_files/2025/03/17/7GbbBlvZSDuSGAzHBNra.jpg)
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவும் ஒரு ஜூஸ் பற்றி டாக்டர் நித்யா டாக்டர் ப்ளஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்து இருக்கும் பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
உடல் பருமன் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு பிரச்சனைகள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில மருந்துகள் போன்றவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன. குறிப்பாக, தைராய்டு கோளாறுகள் மற்றும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு சவாலாக அமையலாம்.
தேவையான பொருட்கள்:
அருகம்புல்
கருவேப்பிலை
முடக்கற்றான்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 2 அல்லது 3
செய்முறை:
முதலில், அருகம்புல், கருவேப்பிலை மற்றும் முடக்கற்றான் இலைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த இலைகள், இஞ்சி, மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்ற அருகம்புல் உதவுகிறது. கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தணிக்க இது பயனுள்ளதாக இருக்கும். கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us