இந்த கொத்தமல்லி சட்னியை நாம் இட்லி, சப்பாத்தி, தோசை என்று எந்த காலை உணவுடன் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
தேங்காய்
புளி
பச்சை மிளகாய்
உப்பு
பொதினா
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கொத்தமல்லி பச்சை மிளகாய்யை வதக்க வேண்டும். தொடர்ந்து அதை ஆற விட வேண்டும். இதுபோல தேங்காய் துண்டுகளை வறுக்க வேண்டும் . இதையும் ஆற வைக்க வேண்டும். தற்போது இவை இரண்டையும் சிறு புளி சேர்த்து அரக்கவும். இந்நிலையில் கடைசியாக அரைக்கும்போதுதான் பொதினாவை சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்து கடுகு, கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.