அடுப்பு வேணாம்... வெறும் 3 நிமிசத்துல அட்டகாசமான இந்த டிஷ்: செஃப் தீனா ரெசிபி
அடுப்பே இல்லாமல் சுமார் 3 நிமிடங்களில் செய்யக் கூடிய தேங்காய் பூண்டு பொடி எவ்வாறு செய்யலாம் என்று சமையல் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். இதன் சுவை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
அடுப்பே இல்லாமல் சுமார் 3 நிமிடங்களில் செய்யக் கூடிய தேங்காய் பூண்டு பொடி எவ்வாறு செய்யலாம் என்று சமையல் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். இதன் சுவை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
சில வகையான உணவுகள் செய்வதற்கு அடுப்பு தேவையில்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் குறைவான பொருட்கள் வைத்து, சுமார் 3 நிமிடங்களில் அடுப்பு இல்லாமல் செய்யக் கூடிய தேங்காய் பூண்டு பொடி எவ்வாறு செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தேங்காய், மிளகாய்த் தூள், பூண்டு, உப்பு மற்றும் நல்லெண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் மூன்று கொப்பரை தேங்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைக்க வேண்டும். இப்போது, பூண்டு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். குறிப்பாக, மூன்று தேங்காய்கள் எடுத்துக் கொண்டதால் அவற்றுக்கு ஏற்றார் போல் 40 முதல் 50 பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனை சற்று பரபரப்பாக அரைத்துக் கொண்டால் சுவையான தேங்காய் பூண்டு பொடி தயாராகி விடும். இத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து தோசை, இட்லி போன்ற டிபனுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
அந்த வகையில், அடுப்பே இல்லாமல் எவ்வாறு சுவையான சைட் டிஷ் செய்வது என்று சமையல் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். இதனை உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.