வழக்கமான அல்வா போல் இல்லாமல் இது மிகவும் சுவையாக இருக்கும். தவறாம சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
தேங்காய் – 2
பச்சரிசி- அரை கப்
நெய்
முந்திரி பருப்பு
வெல்லம் – 2கப்
ஏலக்காய்
செய்முறை : தேங்காய்யை துருவ வேண்டும். முந்திரிகளை இரண்டாக உடைக்க வேண்டும். ஏலக்காய்யை பொடியாக்கி வைத்துகொள்ளுங்கள். பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு பச்சரிசி, தேங்காய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை அடிப்பில் உள்ள பாத்திரத்தில் போடவும். தொடர்ந்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து முந்திரி நெய் சேர்த்து கிளர வேண்டும். 15 நிமிடத்தில் தேங்காய் அல்வா ரெடி.