இனி கடையில சாப்பிட வேண்டாம்.. வீட்டிலேயே சுவையான தேங்காய் போளி ஈசியா செய்யலாம்

நாம் அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட் தேங்காய் போளிதான். ஆனால் வீட்டில் செய்தால் நன்றாக இருக்குமா என்று யோசிப்பீர்கள். ஆனால் தயக்கம் இல்லாமல் இப்படி தேங்காய் போளி செய்து பாருங்கள்.

நாம் அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட் தேங்காய் போளிதான். ஆனால் வீட்டில் செய்தால் நன்றாக இருக்குமா என்று யோசிப்பீர்கள். ஆனால் தயக்கம் இல்லாமல் இப்படி தேங்காய் போளி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இனி கடையில சாப்பிட வேண்டாம்.. வீட்டிலேயே சுவையான தேங்காய் போளி ஈசியா செய்யலாம்

நாம் அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட் தேங்காய் போளிதான். ஆனால் வீட்டில் செய்தால் நன்றாக இருக்குமா என்று யோசிப்பீர்கள். ஆனால் தயக்கம் இல்லாமல் இப்படி தேங்காய் போளி செய்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1 கப்,

உப்பு – தேவையான அளவு

Advertisment
Advertisements

 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

 தண்ணீர் – ½  கப்,

நெய்  3 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் – தேவைக் கேற்ப

முதலில் மைதா மாவில், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். போளிக்கு மஞ்சள் நிறம் வருவதற்காக மாவில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும். பின்பு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அதிக எண்ணெய் சேர்க்க வேண்டும், வழக்கமாக மாவு பிசையும் பதத்தைவிட அதிக எண்ணேய் கலந்து மாவு பிசைய வேண்டும். எண்ணேய் சிறிது அதிகம் தேவை. இதை தயாரித்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சுமார் 2 மணி நேரம் கழித்து எண்ணெய் தனியாக மாவு தனியாக பிரிந்து வரும்.

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – 1 ½  கப்,

வெல்லம் – முக்கால் கப்

 ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்ற வேண்டும். பின்பு துருவிய தேங்காயை அதில் போட்டு வறுக்க வேண்டும். தேங்காய் நன்கு வறுபட்ட பிறகு அத்துடன் வெல்லம் சேர்த்துகொள்ளவேண்டும். வெல்லமும் தேங்காயும் என்றாக சேர்த்து பூரணமாக மாறும். அப்போது அடுப்பை அனைத்துவிடவும்.           பூரணம் ஆரியதும். நாம் தயாரித்து வைத்திருந்த மாவில் சிறிய உருண்டையாக பிரித்து கொள்ள வேண்டும். அந்த உருடையை முதலில் எண்ணெய் தேய்த்த வாழை இலையில் வைத்து வட்டமாக பரப்ப வேண்டும். இதற்கு மேல் பூரண உருண்டையை வைத்து மாவால் மூடி, பூரணம் வெளியில் வராமல் இருக்கும் அளவிற்கு வட்டமாக பரப்ப வேண்டும். தற்போது ஒரு இரும்புகல் வைத்து அது சூடானதும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றி போளியை அப்படி ஒரு புரட்டு இப்படி ஒரு புரட்டு என்று பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட வேண்டும். சுவையான தேங்காய் போலி ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: