/tamil-ie/media/media_files/uploads/2023/03/then.jpg)
தென்னங்கருத்து என்பது தென்னை மரத்தின் தண்டுப்பகுதியை தோல் நீக்கி எடுக்கும் ஒன்று. இந்நிலையில் இளநீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ. அதே அளவு நன்மை தென்னங்கருத்தில் இருக்கிறது.
பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் கோளாறு, தென்னங்கருத்து தீர்வாக இருக்கும். தென்னம்பூ – 5 கிராம் சீரகம் – 5கிராம் சேர்த்து , மஞ்சள் பொடியும் சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு நீங்கும்.
குடல் புண் குணமாக்கும். தென்னம்பாளை 100 கிராம் எடுத்து நன்றாக காயவைத்து, தூளாக்க வேண்டும். அதை திரிபலா சூரணத்துடன் ( இயற்கை அங்காடியில் கிடைக்கும்) சேர்த்து கலந்து தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
விந்தணுக்களை அதிகரிக்க உதவும். தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, சாதிக்காய் ஆகியவற்றை 100 கிராம் எடுத்து இடித்து தூளாக்க வேண்டும்.
இதுபோல உடல் இளைத்தவர்கள் எடை கூட தேங்காய், முந்திரிபருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதில் பனங்கருப்படி சேர்த்து சாப்பிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.