/tamil-ie/media/media_files/uploads/2023/01/Coffee.jpg)
உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா? மேலும் உங்களுக்கு காப்பி பிடிக்கும் என்றால் . இதை பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.
இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், காப்பி குடித்தால், இதய பாதிப்பு ஏற்பட 2 மடங்கு வாய்ப்புகள் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு வேளை நீங்கள் க்ரீன் டீ அல்லது ஒரு கப் காப்பி குடித்தாலும், இதய நோய் வராமல் தடுக்க முடியாது. இந்த ஆய்வானது, ஜப்பானில் உள்ள 6,570 ஆண்களிடமும் , 12,00 பெண்களிடமும் எடுக்கப்பட்டது. இவர்கள் 40 முதல் 79 வயது வரை உள்ளவர்கள்.
இந்நிலையில் ஒரு நாளில் வெறும் ஒரு காப்பி மட்டும் க்ரீன் டீயை குடித்தால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஒரு கப் காப்பியில் 80 முதல் 90 மில்லிகிராம் கஃபைன் (Caffeine) இருக்கிறது . இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகமாகும். கஃபைன் அதிகமாக எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டு. மேலும் கூடுதலாக நமது வாழ்க்கை முறையும் சேர்ந்து இதய நோய் ஏற்படுத்துகிறது.
இதுவே க்ரீன் டீ-யில் கஃபைன் சதவிகிதம் குறைவு. மேலும் இது இதயத்தை பாதிக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.